Wednesday, 30 November 2011

கற்றல் சமூகம் கற்க நினைத்தவை...

"இது தான் நான் வெளிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் கற்றல் பயணம் என்பதால் மிகவும் உற்சாகத்துடன் பயணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். முழுமையான மதிப்பீடு, வாசிப்பு தொடர்பான கூடுதலான செய்திகள் முதலானவற்றை அறிந்துகொண்டு திரும்ப விரும்புகிறேன். அதோடு கோயம்பத்தூரில் கலையம்சம் நிறைந்த இடங்களைப் பார்க்கவும் ஆவலாக உள்ளது. 'இஷா யோகா' மையத்தைக் காண வாய்ப்புக் கிடைத்திருப்பதை எண்ணிப் பேருவகை கொள்கிறேன்."..... அன்புடன் சாந்தா


"யாதானும் நாடாமால் ஊராமால் என்றொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு     என வள்ளுவப் பெருந்தகைப்
புகன்றது  கல்வித்துறையில் உள்ளவர்களுக்குச் சாலப்பொருந்தும்,
அவ்வகையில் இப்பயணம் இனிதாயமையும் என நம்புகிறேன்."... இவண், கும்பலிங்கம் உத்தமன்.


எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திடுவீர் என்றார் பாரதி அன்று.
எட்டுத்திக்கும் சென்று கல்விச்செல்வங்கள் யாவும் கொண்டுவர புறப்படுகிறோம் இன்று.
வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்!”... நட்புடன் வீர. கணேசன்.


"Expecting unique Teaching & Methodes to learn.Which can apply in singapore."
- Mr Anjappan